Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண்கள் பிரச்சனைகளுக்கு கை கொடுக்கும் உலர் திராட்சை

பெண்கள் பிரச்சனைகளுக்கு கை கொடுக்கும் உலர் திராட்சை
, திங்கள், 18 ஜனவரி 2016 (20:45 IST)
மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வலி குறைய, மலச்சிக்கல் தீர ஒரு அருமருந்து உலர் திராட்சை ஆகும். உலர் திராட்சையில் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன.


 

 
திராட்சையில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு.
 
சாதாரணமாக மளிகைக் கடையில் கிடைக்கும் இந்த உலர் திராட்சையில், வைட்டமின் "பி" மற்றும் சுண்ணாம்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. கர்ப்பிணிப் பெண்களின் கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம் தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம்.
 
அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால், பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.
 
மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்து கொண்டே இருக்கும். இந்த பிரச்சனை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டுக் காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி நீங்கும்.
 
உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு. அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil