பொதுவாக பருவம் அடைந்த பெண்களுக்கு முதல் ஒரு வருடம் வரையில் கூட மாதவிடாய் இரத்தப்போக்கு முறையாகவும், சீராகவும், சரியான இடைவெளியிலும் ஏற்படாமல் இருப்பது வழக்கம்தான். பிறகு ஹார்மோன் சுழற்சி சரிவர செயல்படும் போது மாதவிலக்கு முறையாக ஏற்படும்.
மாதவிலக்கு என்பது சுமார் 28 நாட்களுக்கு ஒருமுறை என்பது இயல்பான ஒன்று என்றாலும், அதற்கு 3 நாட்கள் முன்னதாக ஏற்படுவதும் அல்லது 3 நாட்கள் பின்தள்ளி ஏற்படுவதும் இயற்கையானதுதான்.
ஆனால் 21 நாட்களுக்கு குறைவாகவோ அல்லது 35 நாட்களுக்கு அதிகமாகவோ தள்ளிப் போகிறது என்றால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். அதுபோன்றே 7 நாட்களுக்கும் அதிகமாகவும், உதிரப்போக்கின் அளவு அதிகமாக இருப்பின் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.