Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்க் தி டேட்... 5ஜி ஸ்மார்ட்போனை களமிறக்கும் சியோமி!!!

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (14:20 IST)
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சியோமி நிறுவனம், இம்மாதம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக சமூக வலைத்தள பக்கத்தில் பதிவை போட்டுள்ளது. 
 
ஆம், வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 3.00 மணி) புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளதாம். இது  Mi மிக்ஸ் 3 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
அதாவது, சியோமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்த Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் 5ஜி வெர்ஷனை இப்போது வரும் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்த 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் கொண்டிருக்க கூடும் என தெரிகிறது. சியோமி நிறுவம 2019 ஆம் ஆண்டில் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என முன்னர் அறிவித்ததும் கவனிக்கப்பட வேண்டியவையே. 
 
இது இருக்க இன்னொரு புறம் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 X 5ஜி ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 20 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments