தானாகவே மறையும் மெசேஜஸ்: வாட்ஸ் ஆப் கோளாறா??

Webdunia
வியாழன், 3 அக்டோபர் 2019 (13:15 IST)
வாட்ஸ் ஆப்பில் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் மெசேஜ் தானாக மறைந்து விடுமாம், இது வாட்ஸ் ஆப் கோளாறு அல்ல வாட்ஸ் ஆப் புது அப்டேட். 
 
சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது தானாகவே மெசேஜ் அழியும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை வழங்க திட்டமிட்டுள்ளது. 
 
ஆம், நாம் அனுப்பிய மெசேஜ், குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் தானாகவே மறையும் வகையில் இந்த அப்டேட் இருக்குமாம். முக்கியமாக செய்திகளை அனுப்பும் போதும், மற்றவர்களிடம் இது நீண்ட நாட்கள் இருக்க கூடாது என நினைப்பவர்களுக்கும், அல்லது இது ஒரு ஆதாரமாக இருக்க கூடாது என எண்ணுபவர்களுக்கும் இந்த வசதி உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நாம் ஒரு மெஜேச் அனுப்பும் முன்னர் செட்டிங்சில், 5 விநாடிகள் அல்லது ஒரு மணி நேரத்தில் இந்த மெசேஜ் மறைய வேண்டும் என ஆப்ஷனை தேர்வு செய்து பின்னர் மெசேஜ் அனுப்பினால், தானாவே குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் மெசேஜ் மறைந்துவிடும். 
 
முதற்கட்டமாக இது க்ரூப் சேட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதன் பின்னரே பிரைவேட் சேட்டில் செயல்முறைக்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அப்டேட், எந்த வெர்ஷனில் எப்போது வரும் என்ற அதிகாரப்பூர்வ தேதி தெரிவிக்கப்படவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments