Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடங்கியது வாட்ஸ் ஆப்: ஹேக்கர்களின் நாச வேலையா?

Webdunia
வெள்ளி, 7 ஜூன் 2019 (08:46 IST)
உலகின் பல இடங்களில் வாட்ஸ் ஆப் முடங்கியுள்ளதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ் ஆப்புக்கு முக்கிய இடம் உண்டு. மேசேஜ், போட்டோ, ஆடியோ, வீடியோ அனுப்புதல், வாய்ஸ் கால், வீடியோ கால் என பல விஷயங்கள் வாட்ஸ் மூலம் செய்யப்படுகிறது. 
 
இந்நிலையில், உலகின் பல இடங்களில் வாட்ஸ் ஆப் செயலில் திடீரென முடக்கத்திற்குள்ளானதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பயனர்கல் தங்கள் புகார்களை டிவிட்டர் மூலம் பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கு முன்னர் வாட்ஸ் ஆப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயன்றதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்து, உடனடியாக வாட்ஸ் ஆப்-ஐ அப்டேட் செய்யும் படி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. 
 
எனவே, இது ஹேக்கர்களின் நாச வேலையாக இருக்குமோ என்ற அச்சத்தில் பயனர்கள் இருக்கும் நிலையில் இது குறித்து எந்த வித தகவலையும் வெளியிடாமல் வாட்ஸ் ஆப் நிறுவனம் மெளனம் காத்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments