Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்சூரன்ஸ் தெரியும், இது என்ன ரீஇன்சூரன்ஸ்?

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (16:19 IST)
எதிர்பாராத சூழ்நிலைகளில் ஏற்படும் பணப்பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள இன்சூரன்ஸ் போடப்படுகிறது. பொதுவாக இன்சூரன்ஸ் பற்றி எல்லாருக்கும் தெரியும், ரீஇன்சூரன்ஸ் பற்றி தெரியுமா? தெரிந்துக்கொள்ளுங்கள். 
 
நமது பாதுகாப்பு காரணங்களுக்காக காப்பீடு செய்கின்றோம், அதே போல காப்பீடு நிறுவனங்களும் தங்களது பாதுகாப்பிற்காக இன்சூரன்ஸ் செய்கின்றனர், இதையே ரீஇன்சூரன்ஸ் அல்லது மறுக்காப்பீடு என அழைக்கிறோம். 
 
ஆம், ஒரு காப்பீட்டு நிறுவனம் மற்றொரு காப்பீடு நிறுவனத்திலிருந்து தன்னுடைய இழப்புகளை குறைக்கும் பொருட்டு ஒரு காப்பீட்டு திட்டத்தை வாங்கினால், அது மறுகாப்பீடு எனப்படுகிறது. 
 
காப்பீடு செய்துள்ள நிறுவனம் வசூலித்த பிரீமியம் தொகை வாடிக்கையாலர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு போதுமானதாக இல்லையெனில், மறுகாப்பீடு செய்துள்ள நிறுவனத்திடமிருந்து தொகையை வசூலித்து, இழப்பீட்டை ஈடு செய்யும். 
 
இத்தகைய சூழலில்தான் மறுகாப்பீடு காப்பீடு நிறுவனத்தை காப்பாற்றும் அல்லது மறுகாப்பீடு மட்டுமே ஒரு காப்பீட்டு நிறுவனத்தை திவாலாகாமல் காப்பாற்றும் என்றும் கூறலாம். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments