Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலையன்ஸ் தொலை தொடர்பு நிறுவனம்: வெற்றியின் ரகசியம்

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2016 (10:42 IST)
ஏர்டெல், வோடாபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் நேற்று வரையிலான பிரபல ஆப்ரேட்டர்களாய் நிலைத்திருந்தது, ஆனால் இன்றோ எங்கும் ரிலையன்ஸ. எப்படி ரிலையன்ஸ் இதை சாத்தியப்படுத்தியது. அதன் பலம் என்ன..?


 
 
22 ஸ்பெக்ட்ரம் மண்டலங்கள்: 
 
அனைத்து மண்டலங்களிலும் 4G ஸ்பெக்ட்ரம் கொண்ட ஒரே நிறுவனம் ரிலையன்ஸ். இப்போது வரையிலாக நெட்வொர்க் உள்கட்டமைப்பில் ரிலையன்ஸ் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.
 
2010-ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் இந்தியா முழுவதிலும் உள்ள 22 ஸ்பெக்ட்ரம் மண்டலங்களிலும் ரிலையன்ஸ் ஜியோ தான் வெற்றி பெற்றது.  
 
4ஜி சேவை, நெட்வொர்க்: 
 
ஜியோவிற்கு அனைத்து 22 வட்டாரங்களிலும் 4ஜி சேவைகளை வழங்கும் திறன் உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய 4ஜி நெட்வொர்க் ஆகும்.
 
ஆனால் பார்தி ஏர்டெல் 15 இடங்களிலும், ஐடியா 10 இடங்களிலும் மற்றும் வோடபோன் 8 இடங்களிலும் மட்டுமே வழங்க முடியும். 
 
கவரேஜ்: 
 
ஜியோ சுமார் 1.02 லட்சம் கிராமங்களை சென்றடைகிறது மற்றும் முதல் கட்ட நடவடிக்கையின் கீழ் 18,000 நகரங்களில் 4ஜி நெட்வொர்க் கவரேஜ் பெறுகிறது.
 
மொத்தம், 250,000-க்கும் அதிகமான கிமீ நீள உயர் தரமான கண்ணாடி இழை கேபிள், மற்றும் 90,000 சூழல்-நட்பு 4ஜி கோபுரங்கள் வரை ரிலையன்ஸ் நிறுவியுள்ளது.
 
ஒப்பந்தம்: 
 
பெரும்பாலான மற்ற நிறுவனங்களிடம், ரிலையன்ஸ் அளவிலான பைபர் நெட்வொர்க்குகளில் சொந்தமாக கிடையாது, ஒப்பந்தம் மூலமே பிற பைபர் நெட்வெர்க்களை பயன்படுத்தி சேவைகளை வழங்குகின்றன.
 
முதலீடு:
 
வெறும் முன்னோக்கு பற்றிய விஷயங்களை வைத்து மட்டுமே இந்த திட்டத்தில் ரூ.150,000 கோடி என்ற ஒரு மிகப்பெரிய முதலீட்டை செய்துள்ளது ரிலையன்ஸ்.
 
தொழில்நுட்பம்:
 
ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இரண்டு சர்வதேச நீர்மூழ்கி கேபிள் லேண்டின்ங் ஸ்டேஷன்கள் சொந்தமாக உள்ளது. மற்றும் சூழல் நட்பு டவர்கள், அழைப்பிகளை டேட்டாக்களாக்கும் வோல்ட் (VoLTE) தொழில்நுட்பம், புதுமையான அல்லது முன்மாதிரியான விலை.
 
இணைய வேகம்:
 
1 ஜிபிஎஸ் என்ற உச்சக்கட்ட இணைய வேகத்தை வழங்கும் தீவிர அதிவேக ஃபைபர் இணைப்பு திறன் என ஏர்டெல், வோடாபோன், ஐடியா போன்ற நிறுவனத்திடம் இல்லாத பல பலங்களை ரிலையன்ஸ் கொண்டுள்ளது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments