Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் இருக்கா?... இருந்தால் ஆப்பிள் ஐபோன் 7 ரூ.1700க்கு.....

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (09:59 IST)
இந்தியாவில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளுக்கான விற்பனை அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெறும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 
ஆதார்: 
 
இந்தியாவில் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் ஆப்பிள் நிறுவனம் ஆதார் அடிப்படையில் எளியத் தவனை முறையினை அமல்படுத்த இருப்பதாக தெரியவந்துள்ளது.
 
ரூ.1700 முன்பணம்: 
 
அதன் படி ஆதார் அட்டைக் காண்பித்து ரூ.1700 எனும் முன்பணத்தைச் செலுத்தி புதிய ஐபோன்களை பெற முடியும். இந்தத் தவனை முறையைச் சாத்தியமாக்கும் பணிகளில் ஆப்பிள் நிறுவனம் பல்வேறு இந்திய வங்கிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
 
முன்பதிவு: 
 
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விற்பனையாளரான யுனிகான் புதிய ஐபோன்களுக்கான முன்பதிவுகளைத் துவங்கியுள்ளது. புதிய ஐபோன்களை வாங்க முன்பணமாக ரூ.5000 செலுத்த வேண்டும். 
 
ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா:
 
இந்தியாவின் மிகப்பெரிய மின்சாதன நிறுவனங்களாகிய க்ரோமா மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் புதிய ஐபோன்களுக்கான முன்பதிவுகளை விரைவில் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளன. 
 
விநியோகம்: 
 
ஆப்பிளின் விநியோக நிறுவனமான பீடெல் டெலிடெக் நிறுவனம் புதிய ஐபோன்களை அக்டோபர் 7 ஆம் தேதி இரவு 7 மணிக்குத் துவங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், ஐவொல்டு மற்றும் யுனிகான் நிறுவனங்கள் அக்டோபர் 7 ஆம் தேதி 12.00 மணி முதல் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளன.
 
விலை: 
 
இந்தியாவில் புதிய ஐபோன்களின் விலை முழுமையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் குறைந்த பட்சம் ரூ.60,000 முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments