மீண்டும் பயங்கர சரிவை நோக்கி பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

Siva
வியாழன், 22 மே 2025 (10:09 IST)
பங்குச் சந்தை இந்த வாரம் முழுவதுமே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் ஏற்றம் இருந்தது என்பதையும், செவ்வாய்க்கிழமை திடீரென சரிவடைந்ததைப் பார்த்தும் இருக்கிறோம்.
 
இந்த நிலையில், இன்று வியாழக்கிழமை சந்தை மீண்டும் பயங்கரமாக சரிந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் இன்று 700 புள்ளிகள் சரிந்து, 80,904 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 210 புள்ளிகள் சரிந்து, 24,590 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
 
இன்றைய பங்குச் சந்தையில் பாரதி ஏர்டெல், இன்டஸ் இண்ட் வங்கி மற்றும் ஜியோ பைனான்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட ஒரு சில பங்குகள் மட்டுமே உயர்ந்துள்ளன. மற்ற அனைத்து பங்குகளும் சரிவில் தான் வர்த்தகம் ஆகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

காபி ரூ.700, தண்ணீர் பாட்டில் ரூ.100.. இப்படி விலை வைத்தால் தியேட்டர்கள் மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

குருநானக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்தியர்களுக்கு மறுப்பு: பாகிஸ்தான் அடாவடி..!

ஒரே நபர் மீண்டும் மீண்டும் வாக்களித்தபோது, முகவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை? ராகுல் காந்திக்கு கேள்வி

ஓட்டுனர் உரிமத்துடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்.. இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments