Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாரத ஸ்டேட் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க புதிய நிபந்தனை அறிவிப்பு

பாரத ஸ்டேட் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க புதிய நிபந்தனை அறிவிப்பு

பாரத ஸ்டேட் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க புதிய நிபந்தனை அறிவிப்பு
, திங்கள், 25 ஏப்ரல் 2016 (14:59 IST)
பாரத ஸ்டேட் வங்கி (SBI) பணிக்காக விண்ணப்பிப்பவர்களுக்கான புதிய நிபந்தனைகளை அந்த வங்கி அறிவித்துள்ளது.


 

 
பாரத ஸ்டேட் வங்கி கிளார்க் மட்டத்திலான பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
 
இது தொடர்பாக அந்த வங்கி சமீபத்தில் வெளியிட்ட விளம்பரத்தில், விண்ணப்பதாரர்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
 
அதன்படி, கடன் நிலுவை மற்றும் கிரெடிட் கார்டு பண நிலுவைகளை திருப்பித்தராதவர்கள் என்று பெயர் எடுத்தவர்கள் மற்றும் நடத்தை மற்றும் பின்னணி சரியில்லாதவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
 
மேலும், கடன் பெற்றவர்களின் விவரங்களை பராமரிக்கும் "சிபில்" நிறுவனத்தை விண்ணப்பதாரர் அணுகி, தன்னைப் பற்றிய மதிப்பீட்டை தெரிந்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறும் ஸ்டேட் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
 
இந்நிலையில்,  கல்விக்கடன் பெற்ற மாணவர்களுக்கு மட்டும் இந்த நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வங்கி பணியாளர் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this Story:

Follow Webdunia tamil