Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.18,000 கோடி நஷ்டம்!!

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2016 (14:20 IST)
28 பொதுத் துறை வங்கிகள் 2015-16-ம் நிதி ஆண்டில் எதிர்கொண்ட நஷ்டம் ரூ.17,993 கோடி என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


 
 
இவற்றில் 14 வங்கிகள் நிகர நஷ்டத்தை சந்தித்துள்ளன. மற்றவை ஓரளவு லாபம் ஈட்டியுள்ளன. பாங்க் ஆப் இந்தியா எதிர்கொண்ட நஷ்டம் ரூ.6,089 கோடி, பாங்க் ஆப் பரோடா ரூ.5,396 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.3,974 கோடி, ஐடிபிஐ வங்கி ரூ.3,665 கோடி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் ரூ.2,897 கோடி, யூகோ வங்கி ரூ.2,799 கோடி, சிண்டிகேட் வங்கி ரூ.1,643 கோடி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ரூ.1,418 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளன.
 
கடந்த நிதி ஆண்டில் லாபமீட்டிய வங்கிகள் பட்டியலில் எஸ்பிஐ ரூ.9,951 கோடி, ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் ரூ.1,065 கோடி, ஸ்டேட பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர் ரூ.851 கோடி, ஆந்திர வங்கி ரூ.540 கோடி லாபம் ஈட்டி உள்ளது.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments