Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வர்த்தகத்தை புரட்டிபோடும் அம்பானி!! ஆயில், பெட்ரோ கெமிக்கல் டீலிங் ஓவர்

Webdunia
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (13:30 IST)
சவுதி அரேபியாவுடன் ஆயில் மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக முடித்துள்ளது. 
 
ரிலையன்ஸ் குழும வருடாந்திர மாநாடு மும்பையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முகேஷ் அம்பானி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதோடு சில எதிர்பாராத அறிவிப்புகளை வெளியிட்டார்.  
 
குறிப்பாக ரிலையன்ஸ் ஆயில் மற்றும் பெட்ரோ கெமிக்கல்  வர்த்தகத்தில் உள்ள 20% பங்கினை சவுதி அராம்கோ நிறுவனத்திற்கு விற்கும் ஒப்பந்தம் குறித்து செய்தி வெளியிட்டு எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தக்கத்தை புரட்டிப்போட்டுள்ளார். 
ஆம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் சவுதி அராம்கோ நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜாம் நகர் சுத்திகரிப்பு நிலையத்துற்கு தினசரி 5,00,000 லட்சம் பேரல்கள், கச்சா எண்ணெய் நீண்ட கால அடிப்படையில் சப்ளை செய்ய வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் இந்திய மதிப்பு சுமார் 5.3 லட்சம் கோடி ரூபாயாகும்.
 
ரிலையன்ஸ் நிறுவனத்தின் வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய அளவிலான பங்கு விற்பனை என்பது இதுதான் என முகேஷ் அம்பானி இந்த ஒப்பந்தம் குறித்து தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments