Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொபைல் நெட்வொர்க் இல்லாமல் வாய்ஸ் கால்: சோதனையில் ஜியோ

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2018 (17:54 IST)
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ புதிதாக வோ வைபை (வாய்ஸ் ஓவர் வைபை) சேவையை சோதனை செய்து வருகிறது.
 
புதிய வைபை சேவை அடுத்த சில மாதங்களுக்குள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
ஜியோ நிறுவனம் வோ வைபை சேவையை மத்திய பிரதேசம், ஆந்திரா மற்றும் கேரளாவில் சோதனை செய்து வருவதாக டிராய் தெரிவித்துள்ளது. இந்த வசதி அமலுக்கு வந்தால், வாடிக்கையாளர்கள் வைபை இணைப்பு மூலமே வாய்ஸ் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். 
 
இதனால் மொபைல் நெட்வொர்க் வசதியில்லா சூழல்களிலும் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இன்னும் சில மாதங்களில் ரிலையன்ஸ் ஜியோ தனது வோ வைபை சேவையை வணிக ரீதியில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
 
அதாவது 2019 ஆம் ஆண்டு வாக்கில் ரிலையன்ஸ் ஜியோ தனது வோ வைபை சேவையை வணிக ரீதியில் வெளியிட திட்டமிட்டிருக்கலாம். 
 
முதற்கட்டமாக ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்குகளில் மட்டும் இந்த சேவை வழங்கப்பட்டு அதன் பின் மற்ற நெட்வொர்க்குகளிலும் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments