Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொபைல் நெட்வொர்க் இல்லாமல் வாய்ஸ் கால்: சோதனையில் ஜியோ

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2018 (17:54 IST)
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ புதிதாக வோ வைபை (வாய்ஸ் ஓவர் வைபை) சேவையை சோதனை செய்து வருகிறது.
 
புதிய வைபை சேவை அடுத்த சில மாதங்களுக்குள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
ஜியோ நிறுவனம் வோ வைபை சேவையை மத்திய பிரதேசம், ஆந்திரா மற்றும் கேரளாவில் சோதனை செய்து வருவதாக டிராய் தெரிவித்துள்ளது. இந்த வசதி அமலுக்கு வந்தால், வாடிக்கையாளர்கள் வைபை இணைப்பு மூலமே வாய்ஸ் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். 
 
இதனால் மொபைல் நெட்வொர்க் வசதியில்லா சூழல்களிலும் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இன்னும் சில மாதங்களில் ரிலையன்ஸ் ஜியோ தனது வோ வைபை சேவையை வணிக ரீதியில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
 
அதாவது 2019 ஆம் ஆண்டு வாக்கில் ரிலையன்ஸ் ஜியோ தனது வோ வைபை சேவையை வணிக ரீதியில் வெளியிட திட்டமிட்டிருக்கலாம். 
 
முதற்கட்டமாக ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்குகளில் மட்டும் இந்த சேவை வழங்கப்பட்டு அதன் பின் மற்ற நெட்வொர்க்குகளிலும் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments