Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திவாலான ஆர்காம்: மொத்த சொத்தையும் கைப்பற்ற ஜியோவுடன் மோதும் ஏர்டெல்!!

Webdunia
புதன், 7 ஆகஸ்ட் 2019 (13:28 IST)
அனில் அம்பானியின் சொத்துக்களை கைப்பற்ற முகேஷ் அம்பானி கடுமையாக போராடி வரும் நிலையில் ஏர்டெல் நிறுவனும் போட்டிக்கு நிற்கிறதாம்.   
 
இந்திய தொலைத்தொடர்பு துறையில் நல்ல இடத்தை பிடித்து வைத்திருந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஜியோ சூறாவளியில் கவிழ்ந்தது. கடன் நெருக்கடி அதிகமாகி இப்போது ஆர்காம் திவாலாகியுள்ளது.
  
கடனை அடைக்க சொத்துக்களை விற்க முற்பட்டார் அனில் அம்பானி. அனில் அம்பானியின் சொத்துக்களை வாங்க சுமார் 10 - 12 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். 
ஆம், ஆர்காம் நிறுவனத்திடம் இருக்கும் சொத்துக்கள் ஒரு டெலிகாம் நிறுவனத்தின் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவும் என்பதால் சந்தையில் போட்டி அதிகரித்துள்ளது. 
 
எனவே அந்த சொத்துக்களை கைப்பற்ற தற்போது மற்ற நிறுவனங்களுடன் போட்டி போட்டு வருகிறார் முகேஷ் அம்பானி. தற்போது இந்த போட்டியில் ஏர்டெல் நிறுவனமும் இணைந்துள்ளதாம்.  
 
அனில் அம்பானி தலைமை வகிக்கும் ஆர்காம் நிறுவனம் சுமார் ரூ.46000 கோடி கடனில் தவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments