Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கப் பத்திரங்கள் வழங்கும் தேதி ஒத்தி வைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Webdunia
புதன், 25 நவம்பர் 2015 (16:15 IST)
பிரதமர் மோடி அறிமுகம் செய்த தங்கப் பத்திரத் திட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கான பத்திரத்தை வழங்கும் தேதியை ரிசர்வ் வங்கி 4 நாட்கள் ஒத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.


 
 
கடந்த 5ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தங்கத்தை பத்திர வடிவில் வாங்கும் திட்டம் வங்கியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் சேர்ந்தவர்களுக்கான பத்திரங்கள் 26ஆம் தேதி வழங்கப்படும் என ஏற்கனவேஅறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், பத்திரத்தை வழங்கும் நாட்களை சில காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற 30ஆம் தேதி அந்த திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு தங்கப் பத்திரத்தை வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

Show comments