Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் 34 ஆயிரம் நிறுவனங்கள்: நிர்மலா சீதாராமன் தகவல்

ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் 34 ஆயிரம் நிறுவனங்கள்: நிர்மலா சீதாராமன் தகவல்
, வியாழன், 14 ஆகஸ்ட் 2014 (10:05 IST)
அனுமதி பெறாமல் நிதிச் சேவையில் ஈடுபட்டுள்ள 34 ஆயிரம் நிறுவனங்களை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கண்காணித்து வருவதாக மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாநிலங்களவையில் எழுத்து மூலமாக அவர் கூறியது:-

“நிறுவன விவகாரங்கள் துறைக்கு ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள பட்டியலில் மொத்தம் 34,754 நிறுவனங்கள் உள்ளன. இவை வங்கியல்லாத நிதி நிறுவனங்களாக நிதிச் சேவையில் ஈடுபடுகின்றன.

ஆனால் இவை ரிசர்வ் வங்கியிடம் இதற்கான உரிமத்தைப் பெற வில்லை. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பட்டியலில் இந்த நிறுவனங்கள் அனைத்தும் விதிகளை மீறி பொதுமக்களிடமிருந்து டெபாசிட்டுகளைத் திரட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிட்பண்ட் நிறுவனங்களின் உரிமையாளர்கள் பல்வேறு விதிகளில் உள்ள சாதக அம்சங்களை தங்களுக்கு சாதக மாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இருப்பினும் சிறிய முதலீட்டாளர்களின் நலனைக் காப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை நிறுவன விவகா ரங்கள்துறை அமைச்சகம் எடுத்து வருகிறது,

முதலீட்டாளர் விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவது, புதிய நிறுவனங்கள் தங்களது செயல் பாடுகளை தெரிவிக்க வேண்டியதை கட்டாயமாக்குதல் மற்றும் சுதந்திரமான தணிக்கையாளர்கள் மூலம் தணிக்கை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil