Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் நவம்பர் 1 அன்று, நோக்கியா நிறுவனம் மூடப்படுகிறது

சென்னையில் நவம்பர் 1 அன்று, நோக்கியா நிறுவனம் மூடப்படுகிறது
, செவ்வாய், 7 அக்டோபர் 2014 (18:16 IST)
சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த நோக்கியா செல்போன் தயாரிப்பு நிறுவனத் தொழிற்சாலை, 2014 நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் மூடப்பட உள்ளது.
 
செல்போன் உற்பத்திக்குத் தேவையான எந்த ஒப்பந்தமும் கிடைக்காததாலும், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாலும் சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையை மூடுவதற்கான முடிவை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
2006ஆம் ஆண்டு முதல் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த  நோக்கியா நிறுவனம் மூடப்படுவதால், அதில் பணியாற்றி வந்த தொழிலாளர்களின் நிலை கேள்விக்குள்ளாகி உள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil