Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிஎப் பணம் எடுக்க புதிய மொபைல் செயலி

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (10:01 IST)
பிஎப் பணத்தை எடுக்க மொபைல் ஆப் அறிமுகம் செய்ய பிஎப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 
இதில், இ-கேஒய்சி முறையில் ஆதார் எண்ணை அடிப்படையாக வைத்து விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும். தற்போதைய நிலையில், பிஎப் பணம் எடுக்க அல்லது பென்ஷனுக்கு விண்ணப்பிக்க என அனைத்துக்கும் அதற்கான படிவத்தை நிரப்பி நேரில் சென்று வழங்க வேண்டும். இதற்கு மாற்றாக, மொபைல் ஆப்ஸ் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை பிஎப் நிறுவனம் வழங்க உள்ளது.  
 
இந்த ஆன்லைன் சேவையை அளிக்க முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள 123 பிஎப் அலுவலகங்களில் இருந்து பிஎப் சந்தாதாரர்களின் விவரங்கள் பெறப்பட்டு, டெல்லியில் உள்ள மத்திய அலுவலக சர்வரில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 
 
அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது பணியாற்றிய நிறுவனம் உள்ளிட்ட விவரங்கள் ஆப்ஸ் மூலமாகவே பெறப்படும். பணியில் இருந்து ஓய்வுபெறும் அல்லது விலகும் தொழிலாளர் நேரடியாகவே விண்ணப்பிக்கலாம் என்று தெரிகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments