Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்பிஐ வங்கி விதித்துள்ள புதிய கட்டணங்களின் விவரங்கள்!!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2017 (10:38 IST)
ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்களை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை எஸ்பிஐ வங்கி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 


 
 
குறைந்தபட்ச இருப்புத் தொகை:
 
# எஸ்பிஐ வங்கியில் மெட்ரோ நகரங்களில் உள்ள வங்கி கணக்குகளில் 5,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். 
 
# புறநகர் பகுதி கணக்குகளில் 3,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். 
 
# நகரப் பகுதி வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் 2,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். 
 
# கிராமப் பகுதிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் 1,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். 
 
# இவ்வாறு இல்லாவிட்டால் அதற்கேற்ப அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
செக் புக்:
 
# ஒவ்வொரு நிதி ஆண்டுக்கும் 50 செக்குகள் இலவசமாக வழங்கலாம். 
 
# அதற்குப் பிறகு பயன்படுத்தும் ஒவ்வொரு செக்குகளுக்கு 3 ரூபாய் சேவை கட்டணமாக அளிக்க வேண்டும்.
 
# 25 செக்குகளுக்கு 75 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
 
வங்கி அறிக்கை:
 
# வங்கி கணக்கிற்கு ஒவ்வொரு மாதமும் முதல் அறிக்கை இலவசமாக வழங்கப்படும்.
 
# இதுவே டூப்ளிகேட் அறிக்கை வேண்டும் என்றால் 100 ரூபாய் சேவை கட்டணமாகப் பெற வேண்டும்.
 
டெபிட் கார்ட் பயனர்கள்:
 
# டெபிட் கார்டுகள் பயன்படுத்துபவர்களுக்குக் குறைந்தபட்ச கட்டணமாக 15 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும்.
 
ஏடிஎம் வாடிக்கையாளர்கள்:
 
# எஸ்பிஐ ஏடிஎம் வாடிக்கையாளர்கள் முதல் 5 பரிவர்த்தனையை இலவசமாகப் பெற முடியும்.
 
# அதனை மீறும் போது 10 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 
 
# பிற வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் போது மூன்று முறை இலவசமாகவும் அதற்கு அதிகமாக எடுக்கும் போது 20 ரூபாய் கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ச்சி என்ற பெயரில் மக்களை அழிக்காதீங்க.. உங்க நாடகம் அம்பலம் ஆயிட்டு! - விஜய் ஆவேசம்!

குப்பைக்கூளமான மெரினா.. காணும் பொங்கல் விடுமுறை இனி ரத்து? - பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை!

காப்பி பேஸ்ட் .. சொந்தமாக ஒரு அறிக்கை கூட வெளியிட முடியவில்லையா? ஈபிஎஸ்-க்கு கண்டனம்..!

விஷம் கொடுத்து காதலனை கொலை செய்த வழக்கு: காதலிக்கு தூக்கு தண்டனை.. அதிரடி தீர்ப்பு..!

துணை முதல்வர் பதவி பவன் கல்யாணுக்கு பறிபோகிறதா? ஆந்திர அரசியலில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments