Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு ரூ.467 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2016 (10:38 IST)
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு எதிராக கலிபோர்னியாவை சேர்ந்த பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். 


 
 
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பேபிபவுடர், புற்றுநோய் ஏற்படக் காரணமாக இருக்கிறது என்று கலிபோர்னியாவை சேர்ந்த டெப்ரோஹ் கியானெச்சினி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கியானெச்சினிக்கு ரூ.467 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 
 
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தினுடைய பேபி பவுடர் மற்றும் இதர தயாரிப்புகளும் புற்றுநோய் ஏற்பட காரணமாக இருக்கிறது என்று கிட்டத்தட்ட 1,700 வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
 
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு வழக்குகளில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் 7.2 கோடி டாலர் மற்றும் 5.5 கோடி டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று செயின்ட் லூயிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தற்போது மூன்றாவது வழக்காக கியானெச்சினி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 
 
புற்றுநோய் ஏற்பட ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடர் காரணமல்ல என்று அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கரோல் குட்ரிச் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் பட்டப்பகலில் 20 வயது இளைஞர் மீது துப்பாக்கி சூடு.. ஆம் ஆத்மி கண்டனம்..!

பஹல்காம் தாக்குதல்.. 2 மாதங்களுக்கு பின் இருவரை கைது செய்த NIA.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

தவறான விமான டிக்கெட் வழங்கிய ஸ்பைஸ்ஜெட்.. நுகர்வோர் கோர்ட் அளித்த அதிரடி தீர்ப்பு..!

மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரம் பெங்களூரு.. தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ வைரல்..!

அமெரிக்க தாக்குதலுக்கு பின் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்.. பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments