Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலையன்ஸ் நிறுவனத்தை கைப்பற்ற துடிக்கும் ஜியோ!!

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2017 (14:07 IST)
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடன் பிரச்சைனயால் தவித்து வருகிறது. இந்நிலையில், இந்நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வாங்குவதற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆர்வம் காட்டியுள்ளது. 
 
ஆர்.காம் நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரம், டவர் மற்றும் பைபர் உள்ளிட்ட சொத்துகளை விற்பதன் மூலம் ரூ.35,000 கோடி வரை திரட்ட முடியும் என தெரிகிறது. இதை வாங்குவதற்கு ரிலையன்ஸ் ஜியோ பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிகிறது. 
 
இதன் மதிப்பு சுமார் ரூ.19,000 கோடி இருக்கக்கூடும். அதேபோல் டவர்களை வாங்குவதற்கும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக துவதாக தெரிகிறது. ஆர்.காம் நிறுவனத்துக்கு 43,600 டவர்கள் உள்ளன. இதன் மதிப்பு ரூ.8,000 கோடி முதல் ரூ.9,000 கோடி வரை இருக்கும் என தெரிகிறது.  
 
மேலும், 1.72 லட்சம் கிலோ மீட்டர் அளவு பைபர் நெட்வொர்க்கின் மதிப்பு ரூ.4,000 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது குறித்து ஆர்.காம் மற்றும் ஜியோ ஆகிய இரு  நிறுவனங்களும் எந்தவித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments