Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோவின் வங்கி சேவை: எஸ்பிஐயுடன் கூட்டணி!

Webdunia
வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (15:12 IST)
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் யாரும் எதிர்பாராத புதிய அற்விப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வழக்கமாக ஜியோ அறிவிப்புகள் சலுகைகளை பற்றி இருக்கும் என நினைத்த நிலையில், இந்த அறிவிப்பு இதற்கு மாறானதாக இருக்கிறது.
ஆம், ஜியோ நிறுவனம் வங்கி சேவை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, தொலைத்தொடர்பு, கேபில் டிவி, போன் தயாரிப்பு என ஈடுப்பட்டு வரும் ஜியோ அடுத்து வங்கி சேவையில் களமிறங்கவுள்ளது. 
 
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் எஸ்பிஐ வங்கி இணைந்து அடுத்த தலைமுறைக்கான வங்கி சேவையினை அறிமுகம் செய்துள்ளது. இது ஜியோ பிரைம், எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் பரிவர்த்தனையினை அதிகரிக்க உதவும்.
 
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது மைஜியோ செயலியில் எஸ்பிஐ யோனோ சேவைனையும் ஒருங்கிணைத்து வழங்க உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்னும் ஓரிரு மாதங்களில் இதனை வாடிக்கையாளர்களின் செயல்பாட்டிற்கு வந்துவிடும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments