Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிறுத்தப்பட்ட ஜியோ போன் முன்பதிவு: காரணம் என்ன!!

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (14:18 IST)
ரிலையன்ஸ் ஜியோ தனது புதிய பீச்சர் போன் ஒன்றை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதன் முன்பதிவு ஆகஸ்டு 24 ஆம் தேதி மாலை துவங்கியது.


 
 
ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனை மையங்கள் மட்டும் பல்வேறு விற்பனை மையங்களிலும் ஜியோபோன் முன்பதிவு நடைபெற்றது. இதை தவிர்த்து ஆன்லைனிலும் முன்பதிவு நடத்தப்பட்டது.
 
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இலவச ஜியோ போன் முன்பதிவு நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த தகவல் ஜியோ இணைய பக்கம் மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
 
ஜியோபோனை வாங்க சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதால், முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், முன்பதிவு மீண்டும் துவங்கும் போது தெரிவிக்கப்படும் என்றும் ரிலையன்ஸ் ஜியோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments