ஜியோ-வின் அடுத்த 6 புரட்சி: என்னவென்று தெரியுமா??

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (10:03 IST)
வரம்பற்ற டேட்டா மற்றும் வாய்ஸ் சேவைகளை வழங்கிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் டிடிச் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.


 
 
இலவச டேட்டா, வாய்ஸ் கால்கள் என இலவச சேவைகளை வாரி வழங்கும் ஜியோ நிறுவனம் அதன் புதிய பயனர்களுக்காக 6 எனத்தொடங்கும் மொபைல் எண்கள் ஒதுக்க அனுமதி பெற்றுள்ளதாக தெரிகிறது. 
 
தொலைத் தொடர்புத் துறை (DOT) ஆனது இதுபோன்றதொரு அனுமதியை முதல் முறையாக ரிலையன்ஸ் ஜியோவிற்கு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதன் மூலம் 6 சீரிஸ் எம்எஸ்சி (மொபைல் நிலைமாற்றம் குறியீடு) தொலைபேசி எண்களை வெளியிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
அசாம், ராஜஸ்தான், மற்றும் தமிழ்நாட்டில் இந்த 6 சீரிஸ் எம்எஸ்சி குறியீடுகள் வழங்கப்பட உள்ளது. மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் 7 சீரிஸ் எம்எஸ்சி குறியீடுகளும், கொல்கத்தா மற்றும் மகாராஷ்டிராவில் 8 சீரிஸ் எம்எஸ்சி குறியீடுகளும் பெற்றுள்ளது.
 
இந்த 6 சீரிஸ் மொபைல் எண்களை அறிமுகம் செய்வதின் மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தினால் மாநிலங்களை அடிப்படையாக கொண்ட சேவைகளில் முன்னோக்கி செல்லமுடியும் என தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காணாமல் போன 800 செல்போன்களை கண்டுபிடித்த போலீஸ்.. தொலைத்தவர்களுக்கு தீபாவளி பரிசு..!

முன்னாள் கூகுள் சி.இ.ஓ மீது கள்ளக்காதலி பகீர் குற்றச்சாட்டு.. $100 மில்லியன் விவகாரமா?

ஏஐ ஆதிக்கம் அதிகரிப்பதால் விக்கிபீடியா தேடுதல் குறைந்ததா? அதிர்ச்சி தகவல்..!

தங்கம் விலை 2000 ரூபாய் உயர்வு.. வெள்ளி விலை 2000 ரூபாய் குறைவு... சென்னை நிலவரம்..!

ஆர்.எஸ்.எஸ். அமைக்குக்கு தடை விதித்ததா கர்நாடக அரசு? முதல்வர் சித்தராமையா விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments