Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஃபருக்கு என்ன ஓட்ட ... ஜியோ நெட்வொர்க்கிலேயே இருந்துறலாமா?

Webdunia
வியாழன், 24 அக்டோபர் 2019 (14:49 IST)
ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்கலுக்கு இரண்டு புது ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. 

 
ஜியோ சமீபத்தில் மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால் மேற்கொண்டால் நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்தது. அதன் பின்னர் அக்டோபர் 9 ஆம் தேதிக்கு முன்னர் ரீசார்ஜ் செய்தவர்களுக்கு இந்த கட்டணம் நடைமுறைக்கு வாரது, மீதமுள்ளவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்தது. 
 
இந்நிலையில் தற்போது இந்த கட்டணத்தையும் சேர்த்து தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புது ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சலுகைகளில் ஏற்கனவே வழங்கிய பலன்களுடன் கூடுதலாக ஆஃப்நெட் ஐயுசி நிமிடங்கள் கட்டண சேவையும் வழங்கப்படுகின்றன. 
ரூ.555 ரீசார்ஜ் திட்டம்:
இந்த சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ்., செயலிகள் மற்றும் 3000 நிமிடங்களுக்கான ஆஃப்நெட் ஐயுசி காலிங் சேவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
ரூ.444 ரீசார்ஜ் திட்டம்: 
இந்த சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ்., செயலிகள் மற்றும் 1000 நிமிடங்களுக்கான ஆஃப்நெட் ஐயுசி காலிங் சேவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
ரூ.333 ரீசார்ஜ் திட்டம்:
இந்த சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ்., செயலிகள் மற்றும் 1000 நிமிடங்களுக்கான ஆஃப்நெட் ஐயுசி காலிங் சேவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
ரூ.222 ரீசார்ஜ் திட்டம்:
இந்த சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ்., செயலிகள் மற்றும் 1000 நிமிடங்களுக்கான ஆஃப்நெட் ஐயுசி காலிங் சேவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments