Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டொகோமோவுக்கு டாடா சன்ஸ் ரூ.7,950 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2016 (11:37 IST)
ஜப்பான் நிறுவனமான டொகோமோவிற்கு டாடா சன்ஸ் நிறுவனம் ரூ.7,950 கோடி இழப்பீடு வழங்க சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


இந்தியாவை சேர்ந்த டாடா நிறுவனமும், ஜப்பானை சேர்ந்த டொகோமோ நிறுவனமும் கூட்டு சேர்ந்து டாடா டொகோமோ என்னும் தொலைத்தொடர்பு நிறுவனத்தை 2008-ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கினர். கடந்த 2014-ம் ஆண்டு இக்கூட்டணியில்  இருந்து வெளியேற டொகோமோ முடிவெடுத்தது.

மேலும் ஒப்பந்தத்தின்படி டாடா டொகோமோ நிறுவனத்தில் உள்ள டொகோமோ பங்குகளை விற்பதற்கு டாடா ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால் டாடா அதனை செய்யவில்லை. இதனால் கடந்த ஆண்டு லண்டனில் உள்ள சர்வதேச தீர்ப்பாயத்தில் டாடாவுக்கு எதிராக டொகோமோ நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

டொகோமோ நிறுவனத்தின் பங்கு 26.5%. இதனை ரூ.13,070 கோடிக்கு வாங்கியது. இப்போது இதில் 50% தொகை இழப்பீடாக வழங்க சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டிருக்கிறது. டொகோமோ நிறுவனத்தின் பங்குகளை வாங்கிக்கொள்ள டாடா சன்ஸ் முன்வந்தது. இதற்காக ரிசர்வ் வங்கியின் அனுமதி கோரியது. ஆனால் ரிசர்வ் வங்கியின் அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments