Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடனடி கடன் வேண்டுமா? இதோ இருக்கு 5 பெஸ்ட் ஆப்ஸ்!

Webdunia
சனி, 3 நவம்பர் 2018 (12:12 IST)
கடன் வேண்டும் என்றால் வங்கியை அனுகவேண்டும் என்ற நிலை மாறி தற்போது மொபைல் ஆப்ஸ்களிலும் கடன் பெற்றுக்கொள்ளளாம் என்ற நிலை உருவாகியுள்ளது. தற்போது உடனடி பணத்தேவைக்கு கடன் வழங்கிம் 5 பெஸ்ட் ஆப்ஸ்களை பற்றி தெரிந்த்துக்கொள்வோம்.
 
1. ஸ்மார்ட் காயின் (Smart Coin): 
# ஸ்மார்ட் காயின் செயலியை பயன்படுத்தி கடன் விண்ணப்பத்தை சமர்ப்பித்த உடனேயே, அதே நாளில் தனிநபர் கடன் பெற இயலும். 
# இந்த செயலியில் வங்கி தகவல்கள், அடையாள ஆவணம், கடன் தொகையை மட்டும் பதிவேற்றம் செய்தால் போதும்.
# ஸ்மார்ட்காயின் செயலியில் ரூ.1000 முதல் ரூ.50,000 வரை கடன் பெறலாம். 
 
2. கேபிடல் பர்ஸ்ட்(Capital First): 
# கேபிடல் பர்ஸ்ட் செயலி தனிநபர் கடன், தொழில் கடன் அல்லது வாகனக் கடன் என அனைத்தையும் விண்ணப்பிக்க அனுமதிக்கும்.
# கடன் சம்பந்தப்பட்ட அனைத்து வித தகவல்கள், கடன் சலுகைகள் குறித்த அறிவிப்புகள் என எல்லாம் அடிக்கடி தெரியப்படுத்தப்படும். 
 
3. கிரீடி (Credy): 
# கிரீடி செயலியில், வெறும் ஒரு நிமிடத்தின் கடன் விண்ணப்பம் பரிசீலிக்கப்படுகிறது. ரூ.10,000 முதல் ரூ.1,00,000 வரை கடன் வழங்கபப்டுகிறது. 
# மாதம் 1 - 1.5% வரை வட்டி விதிக்கப்படுகிறது. குறிப்பாக பயனரின் மாத சம்பளம் குறைந்தபட்சம் ரூ.15,000 இருக்க வேண்டும். சென்னை அல்லது பெங்களூரில் வசிக்கும் நபராக இருக்க வேண்டும். 
 
4. கேஷ் இ (Cash E): 
# கேஷ் இ உடனடி கடன் செயலி, 15 நாட்கள் என்ற மிக குறுகிய காலத்திற்கு கடன் வழங்குகிறது. 
# ரூ.10,000 முதல் ரூ.2,00,000 என்ற வரம்பில் கடன் வழங்குகிறது. பான் எண், முகவரி ஆவணம், சமீபத்திய சம்பள சான்றிதழ், வங்கிக்கணக்கு ஆவணம் போன்ற 5 ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். 
 
5. கேஷியா (Cashiya): 
# கேஷியா குறுகிய கால தனிநபர் கடனை வழங்குவது மட்டுமில்லாமல், வரவு மற்றும் செலவுகளை மேலாண்மை செய்யவும் பயன்படுகிறது. 
# இந்த செயலியை பயன்படுத்தி மருத்துவக் காப்பீடு, கார் அல்லது இருசக்கர வாகன காப்பீடு போன்றவற்றை வாங்க முடியும். 
# முதலீடுகள் மற்றும் பணி ஓய்வு பெற்றபின் இருக்கும் சேமிப்புகள் போன்றவற்றை திட்டமிட முடியும்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments