Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜுலை 31 கடைசி நாள்: எச்சரிக்கை விடுக்கும் வருமான வரித்துறை!

Webdunia
திங்கள், 16 ஜூலை 2018 (14:08 IST)
வருமானவரி சட்டத்தின்படி வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய வரும் ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே, இதனை நினைவுப்படுத்தியும் அபராத தொகையை குறிப்பிட்டும் வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இதுகுறித்து, வருமான வரித்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு பின்வருமாறு... 
 
# வருமானவரி கணக்கை அதற்குரிய நாளான வரும் 31 ஆம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்வோர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை. 
 
# மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை வரும் 31 ஆம் தேதிக்குப் பிறகு, அதேசமயம் அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்தால் ரூ.1000 அபராதம்.  
 
# மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் மேல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை வரும் 31 ஆம் தேதிக்குப் பிறகு ஆனால் வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்தால் ரூ.5,000 செலுத்த வேண்டும். 
 
# இதனையே டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பிறகு அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்தால் ரூ.10,000 செலுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments