தங்கம் விலை நேற்று திடீரென குறைந்தது. ஒரு சவரன் ரூ.23368-க்கு விற்கப்பட்டு வந்த 22 காரட் தங்கம் ஒரேயடியாக சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.23208-க்கு விற்கப்பட்டது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியதால் கடந்த மாதம் 24-ஆம் தேதி தங்கத்தின் விலை அதிரடியாக ஒரு கிராமிற்கு ரூ.138 உயர்ந்தது, இதனால் ஒரு சவரனுக்கு ரூ.1104 உயர்ந்த ஒரு சவரன் தங்கம் ரூ.23720-க்கு விற்கப்படுகிறது.
யூரோவை தங்கமாக மாற்றுவதாலும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியினாலும் இந்த திடீர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டது. மேலும் தங்கம் விலை உயரும் என நிபுணர்கள் கூறியிருந்தார்கள்.
இந்நிலையில் சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, மற்றும் பங்கு சந்தையில் முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.