Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய 500 ரூபாய் நோட்டுகளின் சிறப்பு அம்சங்கள்!!

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2016 (14:39 IST)
புதுடெல்லியில் நாடாளுமன்றம் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையில் புதிய 500 ரூபாய் வெளியிடப் பட்டதாக ட்விட்டர் மூலம் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 


 
 
100 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதில் வங்கிகள் பல சிரமங்கள் சந்தித்து வரும் நிலையில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் அனைத்து வங்கிகளிலும் விரைவில் அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் ரொக்க கையிருப்பு மற்றும் சந்தையில் பணப்புழக்கம் மேம்படுத்தப்படும்.
 
புதிய ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கையெழுத்துடன் வெளியிடப்படுகிறது. பணம் அச்சிடப்பட்ட ஆண்டாக 2016 ஆம் ஆண்டும், சுத்தமான இந்தியா திட்டத்தின் குறியீடும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
புதிய 500 ரூபாய் நோட்டு வண்ணம், அளவு, வடிவமைப்பு, பாதுகாப்பு குறியீடுகளின் இருப்பிடம் போன்றவை வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 
 
புதிய 500 ரூபாய் நோட்டின் முன்புறம் மகாத்மா காந்தி உருவம், அசோகத் தூண் சின்னம், கோடுகள் மற்றும் அடையாள குறிகள் இடம்பெற்றுள்ளன. காந்தியின் புகைப்படம் நோட்டின் வலதுபுறத்தில் இருந்து மையப்பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. 
 
பணத்தின் மதிப்பான 500-இன் நியூமரிக்கல் எண் நோட்டின் வலது கீழ் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இந்த எண் பச்சை - நீலம் நிறமாக மாறக்கூடியதாக இடது பக்கத்தில் தேவநாகிரி மொழியிலும் இடம்பெற்றுள்ளது. 
 
வலது புரத்தில் அசோகர் தூண் சின்னமும், ஆர்பிஐ சின்னமும் மாற்றப்பட்டுள்ளது. புதிய 1000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் செயற்கை கோள் உள்ளதைப் போன்று உள்ளதைப் போன்று புதிய 500 ரூபாய் நோட்டில் செங்கோட்டையின் படம் அச்சிடப்பட்டு இருக்கும்.
 
கண்பார்வையற்றோருக்கான குறியீடுகள்: 
 
கண்பார்வையற்றோர்க்கு வசதியாக நோட்டின் இடது மற்றும் வலது ஓரத்தில் 5 கோடுகளும் வலதுபுறத்தில் வட்டமாக ரூபாய் 500 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments