Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி இணையதளம் நடத்துகிறதா ரிசர்வ் வங்கி?

Webdunia
ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (17:05 IST)
இந்தியன் ரிசர்வ் வங்கியின் இணையதளம் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளின் தகவல்களை பெருவதாக செய்திகள் வெளியானது. இது குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிடுள்ளது.  
 
ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளதாவது, ரிசர்வ் வங்கியின் இணையதளத்தை போல, பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் போலியான இணையதளம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இது சமீபத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த இணையதளத்தில் இருந்து பொதுமக்களின் வங்கி கணக்குகள் மற்றும் விவரங்கள் கேட்கப்படுகின்றன. ரிசர்வ் வங்கியின் இணையதளத்தை ஒத்த வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில் யாரும் எந்த தகவலையும் வழங்க வேண்டாம்.
 
ரிசர்வ் வங்கி எப்போதும் மக்களின் வங்கி கணக்கு விவரங்களை கேட்பதில்லை. எனவே இதுபோன்ற போலி இணையதளங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments