Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகளில் டெபாசிட்; மீண்டும் புதிய கட்டுபாடுகள்: மத்திய அரசு தாடாலடி!!

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2017 (12:18 IST)
வங்கிகளில் பணம் டெபாசிட் செய்ய மீண்டும் புதிய கட்டுபாடுகளை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. இது குறித்து முழு விவரம் பின்வருமாறு...


 
 
கறுப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கை, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு நடவடிக்கை என மத்திய அரசு பண பரிமாற்றத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. 
 
அந்த வகையில் தற்போது, வங்கிகளில் ரூ.50,000-க்கு மேல் டெபாசிட் செய்ய தங்கள் அசல் அடையாள அட்டையை எடுத்து செல்ல வேண்டுமென்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
டெபாசிட் செய்பவர்கள் கொண்டு வரும் ஆவணத்தை வங்கி அதிகாரிகள் சோதனை செய்த பிறகே அடுத்த கட்ட டெபாசிட் செயல்முறைகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
பணம் டெபாசிட் மட்டுமின்றி இது புதிய வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும், சிட் பண்ட்ஸ், கூட்டுறவு வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள், வங்கி சாராத நிறுவனங்கள் என அனைத்துக்கும் இது பொருந்தும் என மத்திய அரசிடம் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments