Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன் பயன்படுத்தி ஏடிஎம்களில் பணம் எடுக்கலாமா...?

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2018 (19:39 IST)
மோடி ஆட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதிலிருந்து அனைத்து தரப்பு மக்களும் டிஜிட்டல் மற்றும்  கார்ட் ( கிரடிட், டெபிட் ) பண பரிவர்த்தனைக்கு மாறிவிட்டார்கள் என்று தெரிகிறது.
இந்நிலையில் ஏடிஎம்களில் கார்டுகளைப் பயன்படுத்தினால் மட்டுமே பணம் எடுக்க முடியும்  என்ற நிலைமை நம் இந்தியாவில் உள்ள ஏடிஎம்களில் உள்ளது.
 
இந்நிலையில் பிரபல வங்கிகள் கூடிய விரைவில் ஸ்மார்ட் போன் மூலம் பணம் எடுப்பது பற்றிய அறிவிப்பை  வெளியிட உள்ளன.
 
அதாவது ஏடிஎம்களில் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் யூபிஐ செயலியில் உள்ள கியூ.ஆர்.குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் எடுப்பதற்கான வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது.
 
ஸ்மார்ட் போன் வாயிலாக ஏடிஎம்களில் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட வங்கிகளில் யூபிஐ செயலிகளை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.
 
அதன்பின் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கணினி திரையில் தெரியும் கியூ ஆர்(QR) குறியீட்டினை யூபிஐ மூலம் ஸ்கேன் செய்து அதற்கேற்ற பாதுகாப்பான பின் எண்ணை உள்ளீட்டு வங்கி கணக்கை அணுகுவதன் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
 
தற்போது முழு வீச்சில் இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், ஆனால் இந்திய தேசிய கொடுக்கல் நிறுவனம் இதற்கு அனுமதி தரவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
ஸ்மார்ட்போன் மூலம் பணம் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற்றால் அது பாதுகாப்பானதாகவும் மிக்க பயனுள்ளதாக அமையும் என்று  வாடிக்கையாளர்கள் கருதுகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க கல்வித்துறை கலைப்பு.. மாகாணங்களிடம் முழுமையாக ஒப்படைப்பு: டிரம்ப் உத்தரவு..!

காதல் திருமணத்தால் மிரட்டால்.. மாலை மாற்றிய கையோடு போலீசில் தஞ்சமடைந்த மணமக்கள்..!

3,274 அரசு ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்கள்! - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!

27 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு: கடலூர் அருகே பரபரப்பு.!

புகழ்பெற்ற Naruto, OnePiece அனிமேஷன் இயக்குனர் காலமானார்! - ரசிகர்கள் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments