வருமானம் இன்றி தவிக்கும் பிஎஸ்என்எல்: சிக்கலில் அரசு!

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (14:27 IST)
பிஎஸ்என்எல் கடந்து மூன்று ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருவதால், பிஎஸ்என்எல் நிறுவனம் வலுகுறைந்த பாதிக்கப்பட்ட நிறுவனம் என டிபிஈயின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அறிவிக்கப்பட்டுள்ளது. 
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் 2017-18 நிதியாண்டில் ரூ.4,785 கோடி நஷ்டம் அடைந்திருக்கிறது. அதேபோல், வருவாய் ரூ.27,818 கோடியாக குறைந்திருக்கிறது. 
 
2015-16 நிதியாண்டில் ரூ.4,859 கோடியும், 2016-17 நிதியாண்டில் ரூ.4,786 கோடியும் நஷ்டத்தை சந்தித்தது. இந்த ஆண்டு நஷ்டத்தின் அலவி சிறிது குறைந்திருந்தாலும் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நஷ்டத்தை சந்தித்துள்ளதால் அரசு சிக்கலில் உள்ளது. 
 
எனவே, பொதுத்துறை அமைப்புகள் துறையின் (டிபிஈ) அறிவுறுத்தலுக்கு ஏற்ப வலுகுறைந்த பாதிக்கப்பட்ட நிறுவனமாக பிஎஸ்என்எல் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மற்றொரு பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான எம்டிஎன்எல்-லும் நஷ்டத்தை சந்தித்துள்ளதால், பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை ஒன்றாக இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments