Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமானம் இன்றி தவிக்கும் பிஎஸ்என்எல்: சிக்கலில் அரசு!

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (14:27 IST)
பிஎஸ்என்எல் கடந்து மூன்று ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருவதால், பிஎஸ்என்எல் நிறுவனம் வலுகுறைந்த பாதிக்கப்பட்ட நிறுவனம் என டிபிஈயின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அறிவிக்கப்பட்டுள்ளது. 
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் 2017-18 நிதியாண்டில் ரூ.4,785 கோடி நஷ்டம் அடைந்திருக்கிறது. அதேபோல், வருவாய் ரூ.27,818 கோடியாக குறைந்திருக்கிறது. 
 
2015-16 நிதியாண்டில் ரூ.4,859 கோடியும், 2016-17 நிதியாண்டில் ரூ.4,786 கோடியும் நஷ்டத்தை சந்தித்தது. இந்த ஆண்டு நஷ்டத்தின் அலவி சிறிது குறைந்திருந்தாலும் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நஷ்டத்தை சந்தித்துள்ளதால் அரசு சிக்கலில் உள்ளது. 
 
எனவே, பொதுத்துறை அமைப்புகள் துறையின் (டிபிஈ) அறிவுறுத்தலுக்கு ஏற்ப வலுகுறைந்த பாதிக்கப்பட்ட நிறுவனமாக பிஎஸ்என்எல் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மற்றொரு பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான எம்டிஎன்எல்-லும் நஷ்டத்தை சந்தித்துள்ளதால், பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை ஒன்றாக இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம்..!

சொந்த வீடு, பான் அட்டை, ஆதார் அட்டை.. 30 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த வங்கதேச தம்பதி கைது

அடுத்த கட்டுரையில்
Show comments