Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ங்கொப்பன் மவனே... நஷ்டம் நஷ்டம்னு கதறிட்டு லாபம் பார்த்த ஏர்டெல்!

Webdunia
செவ்வாய், 10 டிசம்பர் 2019 (13:53 IST)
டிராய் வெளியிட்டுள்ள காலாண்டு வருவாய் விவரங்களில் ஏர்டெல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட அதிக லாபத்தை ஈட்டியுள்ளது. 
 
தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இந்திய நெட்வொர்க் நிறுவனங்களின் காலாண்டு வருவாய் (ஜூலை முதல் செப்டம்பர்) விவரங்களை வெளியிட்டது. இந்த விவரத்தின் அடிப்படையில் ஏர்டெல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட அதிக லாபத்தை ஈட்டியுள்ளது தெரியவந்துள்ளது. 
 
1. ஏர்டெல் நிறுவனம் ரூ. 19,061 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. 
2. வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 15,988.49 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது.
3.  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 15,945.62 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது.
4. அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் ரூ.3,222.91 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. 
 
ஆனால், சமீபத்தில் ஏர்டெல் நிறுவனமோ நஷ்டத்தின் காரணமாக 14 - 40 சதவீதம் கட்டணங்களை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. அதோடு தற்போது வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து ரூ.4,900 கோடி முதலீட்டை பெற  மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments