Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஆவது, 4 ஆவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2015 (08:27 IST)
மாதந்தோறும் 2 ஆவது மற்றும்  4 ஆவது சனிக்கிழமை அனைத்து வங்கிகளுக்கும் பொது விடுமுறை விடப்படுவதாக ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
 
வங்கி ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, மாதத்தின் 2 ஆவது மற்றும் 4 ஆவது சனிக்கிழமைகளை பொது விடுமுறையாக அறிவிக்க மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்னர் ஒப்புதல் தெரிவித்தது.
 
இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்து இந்த அறிவிப்பு அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வமாக அறிவித்தது.
 
அதன்படி, பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற வங்கிகள், உள்ளூர் வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் மாதத்தின் 2 ஆவது மற்றும் 4 ஆவது சனிக்கிழமைகள் பொது விடுமுறை விடப்படுகிறது.
 
மேலும், மாதத்தின் மற்ற சனிக்கிழமைகளில், வங்கிகள் முழு வேலைநாளாக செயல்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments