Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 நாட்களில் 19,000 கோடி ரூபாய்க்கு விற்பனை: அதிரடி காட்டும் அமேசான், ஃபிளிப்கார்ட்!

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (14:13 IST)
கடந்த வாரம் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நடத்திய விழாக்கால விற்பனையில் 3 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 19 ஆயிரம் கோடி) அளவுக்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக ரெட்ஷீர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் கடந்த செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரை விழாக்கால சிறப்பு விற்பனையை நடத்தின. இதில் கிட்டத்தட்ட 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் கலந்து கொண்டு தங்கள் பொருட்களை விற்பனை செய்திருக்கின்றனர். நாள்தோறும் 2 லட்சத்துக்கும் அதிகமான கஸ்டமர்கள் பொருட்களை வாங்கியிருக்கிறார்கள். புதிய ரக மொபைல்கள் விற்பனை, அதிரடி ஆஃபர்கள், கேஷ்பேக்குகள் என 6 நாட்கள் விற்பனை கோலாகலமாக நடந்தது.

ஸ்னாப்டீல் உள்ளிட்ட மேலும் சில ஆன்லைன் நிறுவனங்களும் விற்பனை நடத்தியிருந்தாலும் 95 சதவீத விற்பனையை அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் செய்துள்ளன. இதன்மூலம் 3 பில்லியன் டாலர்களுக்கு விற்பனையாகி உள்ள நிலையில் அடுத்தக்கட்ட விழாக்கால விற்பனையில் மேலும் 3 பில்லியன் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments