Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 நாட்களில் 19,000 கோடி ரூபாய்க்கு விற்பனை: அதிரடி காட்டும் அமேசான், ஃபிளிப்கார்ட்!

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (14:13 IST)
கடந்த வாரம் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நடத்திய விழாக்கால விற்பனையில் 3 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 19 ஆயிரம் கோடி) அளவுக்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக ரெட்ஷீர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் கடந்த செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரை விழாக்கால சிறப்பு விற்பனையை நடத்தின. இதில் கிட்டத்தட்ட 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் கலந்து கொண்டு தங்கள் பொருட்களை விற்பனை செய்திருக்கின்றனர். நாள்தோறும் 2 லட்சத்துக்கும் அதிகமான கஸ்டமர்கள் பொருட்களை வாங்கியிருக்கிறார்கள். புதிய ரக மொபைல்கள் விற்பனை, அதிரடி ஆஃபர்கள், கேஷ்பேக்குகள் என 6 நாட்கள் விற்பனை கோலாகலமாக நடந்தது.

ஸ்னாப்டீல் உள்ளிட்ட மேலும் சில ஆன்லைன் நிறுவனங்களும் விற்பனை நடத்தியிருந்தாலும் 95 சதவீத விற்பனையை அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் செய்துள்ளன. இதன்மூலம் 3 பில்லியன் டாலர்களுக்கு விற்பனையாகி உள்ள நிலையில் அடுத்தக்கட்ட விழாக்கால விற்பனையில் மேலும் 3 பில்லியன் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments