டார்கெட் டேட்டா யூசர்ஸ்: ஏர்டெல் புதிய யுக்தி!!

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (14:16 IST)
முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை வழங்கியுள்ளது. அதிலும் அதிக அளவில் டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்காக இந்த சலுகையை வழங்கியுள்ளது. 
 
ரூ.49 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஆனால், இதன் வேலிட்டி 24 மணி நேரம் மட்டுமே. 
 
இது மட்டுமின்றி ரூ.98 மற்றும் ரூ.146 விலையிலும் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த திட்டங்களில் 1 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ஆனால், கூடுதல் டேட்டா தேவைப்படும் பட்சத்தில் ரூ.98 செலுத்தி 2 ஜிபி டேட்டா பெறலாம். இதன் வேலிடிட்டி ஐந்து நாட்கள்.
 
புதிய சலுகைகளை ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஆன்லைன் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த சலுகை ஜியோவின் ரூ.52 திட்டத்திற்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஏர்டெல் டேட்டா அளவையும் உயர்த்தியுள்ளது என்ப்து குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி!.. ஈரான் போர் எதிரொலி!.. இந்தியாவில் மதுபான விலை உயர்வு!...

எங்கே என் பங்குன்னு கேட்க மாட்டேன்!.. தேர்தலில் போட்டியில்லை!.. கமல் அறிவிப்பு!...

நாங்க மட்டும் தக்காளி தொக்கா?!.. தேமுதிகவுக்கு 10 சீட்!. கோபத்தில் கூட்டணி கட்சிகள்!..

குடும்ப தலைவிக்கு ஒரு ஃபிரிட்ஜ்!.. அதிமுக தேர்தல் அறிக்கை!..

திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எவ்வளவு சீட்!.. கரன்ட் அப்டேட்!....

அடுத்த கட்டுரையில்
Show comments