பைசாவும் போச்சு; பயனரும் போயாச்சு: ஏர்டெல் பாடு இனி திண்டாட்டம்தான்!

Webdunia
வெள்ளி, 28 ஜூன் 2019 (15:48 IST)
டிராய் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் அதிக வாடிக்கையாளர்கல் இணைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஜியோ நெட்வொர்க்கில் கடந்த ஏப்ரல் மாத்தில் மட்டும் புதிதாக 80 லட்சத்து 82 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனராம். 
 
இதனையடுத்து பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் 2 லட்சத்து 28 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனராம். ஆக மொத்தம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 11 கோடியே 59 லட்சமாகியுள்ளது.
ஆனால், ஏர்டெல் நெட்வொர்க் ஜியோ வந்ததில் இருந்தே கடும் சரிவினை சந்தித்து வருகிறது. பிஎஸ்என்எல் 3ஜி சேவையை வழங்கினாலும் அதன் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், ஏர்டெல் 4ஜி சேவை வழங்கியும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை, லாபமும் ஈட்டவில்லை. 
 
ஏர்டெல்லும் புது பயனர்களை ஈர்க்கவும், ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும் பல சலுகைகளை வழங்கியும், இதே நிலைதான் தொடர்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments