Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.91,480 கோடி கடன்: நஷ்டத்தில் காலம் கடத்தும் ஏர்டெல்....

Webdunia
புதன், 1 நவம்பர் 2017 (13:52 IST)
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் ரூ.91,480 கோடி கடனுடன் நஷ்டத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
ஏர்டெல் நிறுவனத்தின் செப்டம்பர் மாத காலாண்டு நிகர லாபம் 4 சதவீதம் சரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் லாபம் ரூ.1,461 கோடியாக இருந்தது.
 
தற்போது அதன் லாபம் ரூ.343 கோடியாக உள்ளது. இதோடு ஏர்டெல்லின் மொத்த வருமானமும் 10 சதவீதம் குறைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. இந்திய பிரிவின் வருமானம் 13 சதவீதம் சரிந்திருக்கிறது.
 
செப்டம்பர் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் கடன் ரூ.91,480 கோடியாக இருக்கிறது. இவை அனைத்திற்கு மத்தியிலும், ஏர்டெல் மொபைல் டேட்டாவின் பங்கு 4 மடங்கு வளர்ந்திருக்கிறது. 
 
தற்போது தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டு இருக்கும் நெருக்கடி காரணமாக பல நிறுவனங்கள் சந்தையை விட்டு வெளியேறும் சூழலில் ஏர்டெல் தன்னுடைய சந்தையை உயர்த்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments