Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் தகவல் கசிய முக்கிய காரணம் என்ன தெரியுமா?

Webdunia
புதன், 7 பிப்ரவரி 2018 (13:46 IST)
இந்தியா முழுவதும் தனி நபர் ஆதரமான ஆதார் கார்ட் அனைவருக்கும் வழங்கப்பட்டுவருகிறது. அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் மானியங்களை பெற ஆதார் இணைக்கப்பட வேண்டியுள்ளது. 
 
ஆனால், இவ்வாறு இணைக்கும் தனி நபர் ரகசியங்களுக்கு பாதுகாப்பு இல்லை. பல நேரங்கள் ஆதார் மூலம் தனி நபர் ரகசியங்கள் கசிவதாகவும், ஆதார் தகவல்கள் விற்கப்படுவதாவும் செய்திகள் வெளியாகிறது. 
 
இந்நிலையில், ஆதார் தகவல் கசிவதற்கான முக்கிய காரணம் ஒன்றை ஆதார் அடையாள அட்டை வழங்கும் அமைப்பான யுஐடிஐஏ வெளிடிட்டுள்ளது. அதில், ஆதார் அட்டைகளை லேமினேட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
பொதுவாக பிளாஸ்டிக் மற்றும் லேமினேட் செய்யப்பட்ட கார்டுகளின் க்யூஆர் கோட் பல சமயங்களில் வேலை செய்வதில்லை. அதேபோல இதில் உள்ள தகவல்கள் கசிவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே, உரிமையாளருக்கு தெரியாமலேயே அவரை பற்றிய விவரங்கள் மற்றொருவருக்கு செல்கிறது. 
 
ஆதார் அட்டையை டவுன்லோட் செய்து வெறும் காகிதமாக இருந்தால் கூட செல்லுபடியாகும். இதை போல எம்ஆதாரும் ஏற்புடையதே. எனவே, பொதுமக்கள் ஆதார் எண்ணை லேமினேட் கார்டு பெறுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments