Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணைக்கப்படாத ஆதார் - பான் எண்: 59% மக்களின் நிலை??

Webdunia
புதன், 13 டிசம்பர் 2017 (19:58 IST)
வங்கு கணக்கு, பான் எண், மொபைல் எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், இதுவரை 14 கோடி பேர் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 115 கோடி மக்களிடம் ஆதார் கார்ட் உள்ளது. 33 கோடி பேருக்கு பான் எண் வழங்கப்பட்டுள்ளது. 
 
ஆதார் - பான் இணைப்பு திட்டத்தின்படி இதுவரை 41% மக்களின் பான் எண்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆதாருடன் பான் எண் இணைப்புக்கான கால அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், மீதமுள்ள 59 சதவீத மக்களின் ஆதார் எண்ணும் பான் எண்ணும் இணைக்கப்படவில்லை. இது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை.
 
ஆனால், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை ரத்து செய்துள்ள மத்திய அரசு புதிய காலக்கெடு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 கேடுகெட்ட தேர்தலா இருக்கும்.. திமுக-பாஜக இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: மணி

கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சரிதான்: சீமான் ஆதரவு

2 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி: அதிர்ச்சி தகவல்..!

440 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் சமாதி.. திடீரென பக்தர்கள் கூட்டம் வந்ததால் பரபரப்பு..!

இன்ஸ்டாவில் பிரபலம்.. ரூ.1.35 கோடிக்கு சொத்து..! டிஸ்மிஸ் செய்யப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி..

அடுத்த கட்டுரையில்
Show comments