Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.85,000 கோடி வங்கி கடனை திரும்ப செலுத்தாத 57 பேர்

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2016 (20:17 IST)
நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் இருந்து ரூ.85,000 கோடி வரை கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் 57 பேர் மோசடி செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.


 

 
பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த நபர்களின் பட்டியலை வெளியிட வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
 
அதைத்தொடர்ந்து விசாரணையில் ரூ.500 கோடிக்கு அதிகமாக கடன் வாங்கி திரும்ப செலுத்தாத நபர்களின் விவரத்தை அறிவிக்கும்படி உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.
 
அதன்படி ரூ.85,000 கோடி வரை கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் இருப்பவர்கள் மொத்தம் 57 பேர் என்று ரிசர்வ் வங்கி அறிக்கையை வெளியிட்டுள்ளது. 
 
மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றம்  ரிசர்வ் வங்கிக்கு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments