Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 லட்சம் ஹெக்டேர் பயிர் சேதம்.

Webdunia
வியாழன், 27 நவம்பர் 2008 (12:41 IST)
தஞ்ச ை: தமிழகத்தில் பெய்து வரும் மழையால் 2 லட்சத்திற்கும் அதிகமான பரப்பில் உள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி பாசன பகுதிகளில் 2 லட்சத்து 6 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டு இருந்த தாளடி, சம்பா நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

தஞ்சை, கும்பகோனம், திருவையாறு, திருவிடைமருதூர், ஒரத்தநாடு ஆகிய தாலுகாக்களில் உள்ள நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

தஞ்சை மாவட்டத்தில் மட்டும் சுமார் 47 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.சண்முகம் தெரிவித்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 74,200 ஹெக்டேர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தென் புத்தாறு, வடக்கு புத்தாறு, முடிகொண்டான் ஆறு ஆகியவைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன என்று தெரிவித்தார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments