Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 சதவீத பொருளாதார வளர்ச்சி சாத்தியமானதே: அருண் ஜேட்லி

Webdunia
ஞாயிறு, 21 ஜூன் 2015 (10:01 IST)
10 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டமுடியாதது அல்ல என்பதை பொருளாதர சீர்திருத்தங்கள், கொள்கை மாற்றத்துடன் சேர்ந்த நல்ல பருவமழை ஆகியவற்றை மேற்கோள் காட்டி நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
 
அமரிக்க முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் 9 நாட்கள் சுற்றுப்பயணமாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அமெரிக்கா சென்றுள்ளார்.
 
இது குறித்து அருண் ஜேட்லி  நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது:-
 
10 சதவீத பொருளாதார வளர்ச்சி சாத்தியமானதே.  இந்தியாவில் அதற்கான  ஆற்றல் உள்ளது. கடந்த ஆண்டு கடுமையான பருவமழை பற்றாக்குறை இருந்த போதிலும் 7 சதவீத வளர்ச்சியை இந்தியா எட்டியது.
 
அதேபோல் இந்த ஆண்டும் பயிர்ச்சேதம் இருந்த போதும் 7 சதவீதம் வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. உற்பத்தி துறையில் வளர்ச்சி மெதுவாக ஊர்ந்தே செல்கிறது. அதன் வளர்ச்சி 5 சதவீதமாக மட்டுமே உள்ளது.
 
தற்போது, உட்கட்டமைப்பு துறைகளில் அதிக அளவில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அரசும் உற்பத்தி துறைக்கு உதவி அளிக்கும் வகையில் தனது நிதி கொள்கையை அமைத்துள்ளதால், குறிப்பிடத்தக்க வளர்ச்சி இந்த துறையில் சாத்தியமானதே. இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments