Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளுக்கு நேரடியாக உர மானியம்

Webdunia
விவசாயிகளுக்கு உர மானியம் நேரடியாக வழங்கும் மத்திய அரசின ் திட்டம ், தென்மாநிலங்களில் மதுரையிலும ், வட மாநிலங்களில் ஒரு மாவட்டத்திலும ் முன்னோட்டமாக விரைவில் செயல்படுத்தப்படும் எ ன, மத்திய ரசாயனம் மற்றும ் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்தார்.

தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் நலவாரியம் மூலம ், மதுரை மாவட்ட ஆட்சியர ் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் 968 பயனாளிகளுக்கு ரூ.35,13,600 மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார்.

அப்போது அமைச்சர் அழகிரி பேசும் போது, தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் விவசாயிகள் சமூகப் பாதுகாப்புத ் திட்டத்தின்கீழ் 2006-ம் ஆண்டு முதல் 30.6.2009 வரை உறுப்பினர்கள் திருமணம ், உறுப்பினரின் மகன் அல்லது மகள் திருமண உதவ ி, முதியோர் ஓய்வூதியம ், இயற்கை மரணம ், விபத்த ு, மகப்பேறு உதவ ி, கல்வி உதவி என மொத்தம் 4,08,339 பயனாளிகளுக்கு ரூ.299.21 கோடியில் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதில ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தோருக்க ு ரூ.83.56 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு நேரடியாக உர மானியம் வழங்கும் திட்டம் குறித்து மத்தி ய நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். அதுதொடர்பாக நடவடிக்க ை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு முன்னோட்டமாக எனது தொகுதியில் மதுரை மாவட்டமும ், வட மாநிலத்தில் ஒரு மாவட்டத்திலும் இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த அனைத்த ு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன என்று கூறினார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!