Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புக்கு அபராதம் இல்லை

Webdunia
செவ்வாய், 1 ஏப்ரல் 2014 (13:02 IST)
வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை குறைவாக இருந்தாலோ, கணக்கு இயக்கப்படாமல் இருந்தாலோ அபராதம் விதிக்கப்பட மாட்டாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 
இதுவரை வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை குறைவாக இருந்தாலோ, அல்லது கணக்கு தொடர்ந்து இயக்கப்படாமல் இருந்தாலோ அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இனி இத்தகு முறை மாற்றப்படும்  என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் கடன்களை முன்னாதாக கட்டி முடிப்பதற்கு வசூலிக்கப்படும் கட்டணமும் இனி வசூலிக்கப்படாது என்று 2014 - 15 ஆம் ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ரெப்போ வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களின் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை எனவும் குறுகிய கால கடன் வட்டி விகிதம் 8% ஆகவும், வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம் 4% ஆகவும் நீடிக்கும் என அறிவித்துள்ளது.

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

Show comments