முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தந்தையும், சுதந்திர போராட்ட தலைவர்களில் ஒருவருமான மோதிலால் நேருவின் 150வது பிறந்தநாளையொட்டி, அவரது நினைவாக புதிய ஐந்து ரூபாய் நாணயம் வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
புதிய நாணயத்தில் அசோகா தூணில் இடம்பெற்றுள்ள சிங்க முகங்களும் அதன் கீழே ‘சத்யமேவ ஜெயதே’ என்ற வார்த்தைகளும் இருக்கும். பின் பக்கத்தில் மோதிலால் நேருவின் உருவம் பதிக்கப்பட்டிருக்கும்.
ஆங்கிலம் மற்றும் தேவநாகரி எழுத்துகளில் அவரது பெயர் இடம்பெறும். மோதிலால் நேருவின் படத்தின் கீழ் 2012 என்று, ஆண்டின் பெயரும் பொறிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.