Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2013 (13:44 IST)
FILE
பெட்ரோல், டீசல் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த 2 மாதங்களில் பெட்ரோல் விலை 5வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 பைசாவும், டீசல் விலை 50 பைசாவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருவதால் பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஜூன் 1 ஆம் தேதி 75 பைசாவும், ஜூன் 16 ஆம் தேதி ரூ.2ம், ஜூன் 29 ஆம் தேதி ரூ.1.82ம், ஜூலை 15ம் தேதி ரூ.1.55ம் உயர்த்தின. இந்நிலையில் நேற்று ஐந்தாவது முறையாக லிட்டருக்கு 70 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 2 மாதங்களில் பெட்ரோல் மொத்தத்தில் ரூ.6.82 விலை உயர்த்தப்பட்டுள்ளது.

டீசல் விற்பனை மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ.9.29 இழப்பு ஏற்படுவதால் டீசல் விலையும் 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை வாட் வரி மற்றும் உள்ளூர் வரிகள் சேர்ந்தால் சென்னையில் 84 பைசா உயர்ந்து லிட்டர் ரூ.74.49 ஆகவும், மும்பையில் ரூ.78.91 ஆகவும், டெல்லியில் ரூ.71.28 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.78.64 ஆகவும் இருக்கும் என்று தெரிகிறது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments