Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரும் பணவீக்கம் கவலையளிக்கிறது: மன்மோகன் சிங்

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2011 (15:18 IST)
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்துவரும் பணவீக்கம், குறிப்பாக உணவுப் பொருட்களின் விலையேற்றத்தினால் உயரும் பணவீக்கம் கவலையளிக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

டெல்லியில் இந்திய ஆட்சிப் பணிச் சேவை நாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய மன்மோகன் சிங் இவ்வாறு கூறியுள்ளார்.

“நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய நாம் தொடர்ந்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். கடந்த 7 ஆண்டுகளாக நமது நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. திருப்திகரமான வளர்ச்சியை நாம் எட்டியுள்ளோம். உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவிற்கு இடையே இந்த வளர்ச்சியை நாம் எட்டியுள்ளது முக்கியமானது. அதேநேரத்தில், கடந்த ஒன்றரை வருடங்களாக தொடர்ந்து அதிகரித்துவரும் பணவீக்கம், குறிப்பாக உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் மிகுந்த கவலையளிக்கிறத ு” என்று கூறியுள்ளார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments